மே-2 வரைக்கும்… ஸ்டாலின் மிரட்டல்

 

மே-2 வரைக்கும்… ஸ்டாலின் மிரட்டல்

’’மிஸ்டர் வேலுமணி… திமுக என்றால் என்னவென்று இப்போது தெரிகிறதா? நீங்கள் பதவியில் இருக்கின்ற வரை ஆடினீர்கள். உங்கள் பதவி போன பிறகு பாருங்கள்.. ஒவ்வொரு தொண்டனும் வெறித்தனமாக இருக்கிறார்கள். மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்த அநியாயம் கொஞ்ச நஞ்சமா? அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு, காவல்துறையை வைத்துக்கொண்டு திமுகவினர் மீது என்னென்ன பொய் வழக்குகள் போட்டு எப்படி கொடுமை படுத்தினார்கள். அதனையெல்லாம் நாங்கள் மறந்து விடுவோமா என்ன?’’என்று கேட்டார் ஸ்டாலின்.

மே-2 வரைக்கும்… ஸ்டாலின் மிரட்டல்

கவுண்டம்பாளையத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின் மேலும், ‘‘ மே இரண்டாம் தேதி வரை பொறுத்திருங்கள். நீங்கள் அல்ல நானே தலையிட்டு என்ன என்ன செய்கிறேன் என்று பாருங்கள். நான் மிரட்டவில்லை அச்சுறுத்தவில்லை சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்கள் செய்திருக்கும் ஊழல்களை பட்டியல் போட்டு ஏற்கனவே ஆளுநர் இடத்தில் கொடுத்து இருக்கிறோம்.

ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ நாங்கள் நடவடிக்கை எடுத்த அடுத்த நாளே அத்தனை பேரும் சிறைக்கு போகிறார் போகிறார்களா இல்லையா என்று பாருங்கள்.

ஏதோ பணத்தை வைத்துக்கொண்டு அதிகாரத்தை வைத்துக் கொண்டு காவல்துறையை வைத்துக்கொண்டு தேர்தலை நடத்தி விடலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் வாக்களிக்கப் போவது மக்கள்தானே என்பதை மறந்துவிடாதீர்கள். இங்கு மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறப் போகிறது’ என்றார்.

மிரட்டவில்லை என்று ஸ்டாலின் சொன்னாலும் அவரின் பேச்சு தொணி மிரட்டலாகவே இருந்தது என்கின்றனர் அங்கிருந்த அதிமுகவினர்.