திருவள்ளூர்: திருநின்றவூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

 

திருவள்ளூர்: திருநின்றவூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். திருநின்றவூர்அடுத்த நடுகுத்தகை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 16ஆம் தேதி அன்று சி.டி.ஹெச் சாலை சந்திப்பில் நடந்துசென்றபோது, அங்கு இருசக்கரவாகனத்தில் வந்த 2 நபர்கள் அவரை மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்துச்சென்றுள்ளனர்.

திருவள்ளூர்: திருநின்றவூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

இதுகுறித்து மாரிமுத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துதிருநின்றவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே,
கரளப்பாக்கம் பகுதியில் நடந்த நகை கொள்ளை தொடர்பாக அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில், கொள்ளையில் ஈடுபட்ட பெரம்பூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஜோஸ்வாவை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

திருவள்ளூர்: திருநின்றவூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

அப்போது அவர்கள் மாரிமுத்துவிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டதும், மேலும் அப்பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து 2பேரையும் கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இருந்து 15 சவரன் நகை மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.