2 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை

 

2 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை


தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மேட் மண்டலம் அனாஜ்பூரில் 2மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

2 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை

அனாஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கய்யாவின் மகள் பாலமணிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் பாலாமணி தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். பாலாமணி நேற்று வழக்கம் போல் இரவு வீட்டில் குழந்தையை அருகில் படுக்க வைத்து தூங்கினார். விடியற்காலையில் எழுந்த பாலாமணி அருகில் படுக்க வைத்திருந்த குழந்தை காணமல் போனதை அடுத்து பெற்றோருக்கு தெரிவித்தார். பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் அனாஜ்பூரில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஏதாவது தடயம் உள்ளதா என பார்த்தனர். ஆனால் போலீசாருக்கு எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. பின்னர் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது குழந்தை சடலமாக தண்ணீர் தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் உடல் வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த குழந்தையை தாய் மாமா மற்றும் அத்தையே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை கைது செய்தனர். குடும்ப சண்டையின் காரணமாக குழந்தை கொலை செய்யப்பட்டுருக்கலாம் என கூறப்படுகிறது. குழந்தை கொலை செய்து பின்னர் தொட்டியில் வீசப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.