கன்னியாகுமரி: வறுமையால் 2 பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு, தற்கொலை செய்த தாய்

 

கன்னியாகுமரி: வறுமையால் 2 பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு, தற்கொலை செய்த தாய்

கன்னியாகுமரி அருகே வறுமை காரணமாக தனது இரு குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் அருகே கிழக்கு நெசவாளர் காலனியை சேர்ந்த ராமதாஸ் என்பவரது மகன் ரஞ்சித்குமார் (32). இவருக்கு ராசி (28) என்ற மனைவியும், அக்க்ஷயா (5), அனியா (3) ஆகிய குழந்தைகளும் உள்ளனர். கடந்த வருடம் உடல்நல குறைவு காரணமாக ரஞ்சித்குமார் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, ரஞ்சித் குமாரின் மனைவி ராசி, தனது மாமனார், மாமியாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்,
கணவர் இறந்ததால் வேறு வருமானம் இல்லாத சூழலில், மாமனார் கூலிவேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் அவர்கள் வாழ்க்கை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி: வறுமையால் 2 பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு, தற்கொலை செய்த தாய்

ஏற்கனவே கணவரை இழந்த நிலையில், வறுமை வாட்டியதால் ராசி கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து தற்கொலை செய்துள்ள தீர்மானித்த அவர், இன்று தனது மகள்கள் இருவருக்கும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடம் வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.