திண்டுக்கல்: செல்போன் கடையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை

 

திண்டுக்கல்: செல்போன் கடையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் செல்போன் கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர்.

திண்டுக்கல்: செல்போன் கடையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை

இதுகுறித்து உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் விசாரணை மேற்கொண்டார். பின்னர், புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அவர், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகிறார்.

இதனிடையே கடந்த ஒரே வாரத்தில் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வந்த 4 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பங்கள் அரங்கேறியுள்ளதால், அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலக்க மடைந்துள்ளனர்.