‘இதுவரை 3,38,512 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் ‘- அமைச்சர் சக்கரபாணி தகவல்

 

‘இதுவரை 3,38,512 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் ‘- அமைச்சர் சக்கரபாணி தகவல்

கடந்த மே மாதம்முதல் ஜூலை 31 வரை மட்டும் 3,38,512 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று உணவுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இதுவரை 3,38,512 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் ‘- அமைச்சர் சக்கரபாணி தகவல்

சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “மக்கள் எளிதில் சென்று வரமுடியாத பகுதிகள் மற்றும் மலைப்பகுதியில் நியாய விலைக்கடைகள் திறக்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.கடந்த மே மாதம் 7ம் தேதியில் இருந்து தற்போது வரை மட்டும் 3,38,512 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தனியாக அல்லது குடும்பமாக வசித்து வரும் திருநங்கைகளுக்கு ஜுலை 31 வரை 2950 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அறிமுகம் செய்த சிறப்பு பொது விநியோத் திட்டம் டிசம்பர் 2021 வரை நீடித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், மாதம் ஒன்றுக்கு 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் மானிய விலையி்ல விநியோகம் செய்யப்படுகிறது” என்றார்.