கொரோனாவின் கோரப்பிடியில் மதுரை : புதிதாக 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

கொரோனாவின் கோரப்பிடியில் மதுரை : புதிதாக  295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவின் கோரப்பிடியில் மதுரை : புதிதாக  295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நேற்று மட்டும் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 17 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 68,254 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவின் கோரப்பிடியில் மதுரை : புதிதாக  295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் மதுரையில் மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,380ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்ததாக மதுரையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.