ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக இரண்டாக பிரிப்பு – செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் நியமனம்

 

ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக இரண்டாக பிரிப்பு – செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் நியமனம்

கழக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு ஈரோடு புறநகர் மாவட்டம் என செயல்பட்டு வரும் மாவட்ட கழக அமைப்பு இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு கீழ்கண்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்று அதிமுக ஒருங்கி ணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இணைந்து அறிவித்துள்ளனர்.

ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக இரண்டாக பிரிப்பு – செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் நியமனம்

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதி, பெருந்துறை சட்டமன்ற தொகுதி எனவும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , பவானிசாகர் தனி சட்டமன்ற தொகுதி எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக மாவட்டச் செயலாளராக கே. ஏ. செங்கோட்டையன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக மாவட்டச் செயலாளராக கே. சி. கருப்பண்ணன் ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக இரண்டாக பிரிப்பு – செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் நியமனம்

கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு நல்கி கழகப் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக இரண்டாக பிரிப்பு – செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் நியமனம்

மேலும் ஈரோடு புறநகர் கிழக்கு ஈரோடு புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட அளவில் திருத்தி அமைக்கப்பட்ட கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.