வயதான பெண்ணை துண்டு துண்டாக வெட்டி வீசிய கணவன் – மனைவி

 

வயதான பெண்ணை துண்டு துண்டாக வெட்டி வீசிய கணவன் – மனைவி

கடன் கொடுத்த பாவத்துக்காக பக்கத்து வீட்டு கணவன் – மனைவியால் துண்டு துண்டாக வெட்டி சாக்கடையில் வீசப்படும் கொடூரத்திற்கு ஆளானார் அந்த 72வயது மூதாட்டி. டெல்லியில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வயதான பெண்ணை துண்டு துண்டாக வெட்டி வீசிய கணவன் – மனைவி

மூதாட்டியிடம் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அனில் ஆர்யா – தனு ஆர்யா கணவன் மனைவி இருவரும் தங்கள் கஷ்ட நிலைமையை சொல்லி ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள்.

இரக்கப்பட்டு கொடுத்த மூதாட்டி, இப்போ தருவார்கள் அப்போ தருவார்கள் என்று பொறுத்து பொறுத்து பார்த்து பொறூமையிழந்து போய், எப்போதுதான் பணத்தை திருப்பி தருவீர்கள் என்று ஆத்திரத்துடன் கேட்டிருக்கிறார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

வயதான பெண்ணை துண்டு துண்டாக வெட்டி வீசிய கணவன் – மனைவி

இதில் ஆத்திரப்பட்ட அனில் ஆர்யா, மூதாட்டியை தாக்க அவர் கீழே விழுந்து மயங்கியிருக்கிறார். தனு ஆர்யாவும் சேர்ந்து மூதாட்டியை உதைத்ததில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

பின்னர் மூதாட்டியின் உடலில் இருந்த நகைகளை கழற்றி எடுத்துக்கொண்டு, அவரை துண்டு துண்டாக வெட்டி சாக்கடையில் வீசிவிட்டனர்.

போலீசார் கொலையாளிகளை விசாரித்து வந்த நிலையில், மூதாட்டியிடம் இருந்து கழற்றிய நகைகளை அடகு வைத்து பணம் வாங்கியதை வைத்து அனில் ஆர்யா, அனு ஆர்யா தம்பதியை போலீசார் கைது செய்தனர்.