வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் கணவன் – மனைவி உடல்

 

வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் கணவன் – மனைவி உடல்

வீட்டு வாசலில் கணவன் மனைவி இருவரும் ரத்தவெள்ளத்தில் கிடந்ததால் அக்கம் பக்கத்தினர் பதறியடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே பில்பருத்தி தாளநத்தம் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் கணவன் – மனைவி உடல்

கிருஷ்ணன் – சுலோக்சனா இருவரும் வாசலிலேயே கழுத்து அறுபட்டு ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்து உள்ளனர். அக்கம்பக்கத்தினர் பதறியடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து போலீசார் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் கணவன் – மனைவி உடல்

ஓய்வு பெற்ற இந்த ஆசிரியர் தம்பதிகளை யார் கொலை செய்து இருப்பார்கள். அவர்களின் கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன் – மனைவி இருவரும் கழுதறுபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பில்பருத்தி தாளநத்தம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.