முருகனை பலிகடா ஆக்கி விட்டு, அதிகாரத்தை பறித்துவிட்டு ஆறுதலா..? திருமாவளவன் ஆவேசம்

 

முருகனை பலிகடா ஆக்கி விட்டு, அதிகாரத்தை பறித்துவிட்டு ஆறுதலா..? திருமாவளவன் ஆவேசம்

நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் அலுவலகம் திறப்பு, சிதம்பரம் அடுத்த புவனகிரியில் டாக்டர் அம்ப்தேகர் கைத்தறி பட்டு சொசைட்டி திறப்பு, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் அலுவலக திறப்பு ஆகியவற்றில் பங்கேற்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.

முருகனை பலிகடா ஆக்கி விட்டு, அதிகாரத்தை பறித்துவிட்டு ஆறுதலா..? திருமாவளவன் ஆவேசம்

சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பாஜகவின் கொங்குநாடு முழக்கம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஜம்மு காஷ்மீரை பிரித்ததைப் போல தமிழ் நாட்டையும் பிரிக்க பாஜக சதி செய்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார். அவர் மேலும் அது குறித்து, பாஜக சமூக பிரிவினைவாத சிந்தனை கொண்ட ஒரு கட்சி. மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் உத்தி தான் பாஜக எடுக்கும் கொங்குநாடு முயற்சி.

பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்களில் இதுபோன்ற உத்திகளை செய்து வருகிறது. ஜம்மு காஷ்மீரை இப்படித்தான் மூன்றாக பிரித்தது. வட இந்திய மாநிலங்களை அரசியல் ஆதாயத்திற்காக துண்டு போட்டு வரும் பாஜக வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி பெற இது போன்ற முயற்சியை செய்து பார்க்கிறது என்று தெரிவித்தார்.

முருகனை பலிகடா ஆக்கி விட்டு, அதிகாரத்தை பறித்துவிட்டு ஆறுதலா..? திருமாவளவன் ஆவேசம்

கொங்குநாடு முழக்கத்திற்கு எல். முருகன் தான் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், கொங்குநாடு முழக்கத்திற்கு முன்னரே பாஜக தலைவர் எல். முருகன் நீக்கப்பட்டிருக்கிறார். பாஜக தலைவராக இருந்த எல். முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு என்றுதான் கருதுகிறேன்.

முருகனை பலிகடா ஆக்கி விட்டு, அதிகாரத்தை பறித்துவிட்டு ஆறுதலா..? திருமாவளவன் ஆவேசம்

தமிழகத்தில் நாலு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது முருகனை பலிகடா ஆக்கி விட்டு அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அமைச்சர் பதவியை வழங்கி இருக்கிறார்கள். முருகன் கையில் இருந்த அதிகாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை மேற்கு மாவட்ட பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.