பட்டிமன்ற பேச்சாளர் சத்தியசீலன் மறைந்தார்

 

பட்டிமன்ற பேச்சாளர் சத்தியசீலன் மறைந்தார்

தமிழறிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான சோ.சத்தியசீலன்(88) உடல்நலக்குறைவால் இன்று திருச்சியில் காலமானார்.

பட்டிமன்ற பேச்சாளர் சத்தியசீலன் மறைந்தார்

பள்ளிஆசிரியர், கல்லூரி பேராசிரியர், கல்லூரி முதல்வர் என பணிபுரிந்துகொண்டே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வானொலி , தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார் சத்தியசீலன்.

பட்டிமன்ற பேச்சாளர் சத்தியசீலன் மறைந்தார்

சத்தியசீலனின் இலக்கிய ஆளுமைக்காக அவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. சொல்லின் செல்வர் விருதினையும் பெற்றுள்ள சத்தியசீலனுக்கு ‘நாவுக்கரசர்’பட்டம் சூட்டினார் குன்றக்குடி அடிகளார்.

சத்யசீலன் மறைவுக்கு ஆசிரியர்களும், தமிழறிஞர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.