பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி! பீகாரில் கொரோனா குறைந்ததால் அரசு உத்தரவு

 

பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி! பீகாரில் கொரோனா குறைந்ததால் அரசு உத்தரவு

கொரோனா தொற்று பரவல் குறைந்ததால் பீகாரில் பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டிருக்கிறார் அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார்.

பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி! பீகாரில் கொரோனா குறைந்ததால் அரசு உத்தரவு

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தினால் கடந்த மே மாதத்தில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கிவிட்ட நிலையில், தளர்வுகள் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
கல்லூரிகளை திறக்கவும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் , பள்ளியில் ஊழியர்கள் அனைவருக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.