அணில்களை முதலில் கையில் எடுத்தது அதிமுகவா? திமுகவா?

 

அணில்களை முதலில் கையில் எடுத்தது அதிமுகவா? திமுகவா?

அதிமுக ஆட்சியில் மின் தடை எனபதே இல்லை. திமுக வந்ததுமே மின் தடை ஏற்பட்டுவிட்டது என்று அதிமுகவினர் தொடர் விமர்சனம் வைத்து வந்த நிலையில், மின் தடை குறித்து விளக்கம் அளித்த மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் தடைக்கு அணில்களும் ஒரு காரணம் என்று சொன்னார். இதனால் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். ‘விஞ்ஞானம்.. விஞ்ஞானம்..’என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்தார். பூமிக்கு அடியில் மின்சாரம் ஓடுகிறதே. அங்கேயும் அணில்கள் ஓடி வயரை கடிக்கிறதா? என்றும் ராமதாஸ் விமர்சித்திருந்தார்.

அணில்களை முதலில் கையில் எடுத்தது அதிமுகவா? திமுகவா?

தெர்மாக்கோல் விவகாரத்தால் ’மதுரை விஞ்ஞானி’ என்றும், ’தெர்மாக்கோல் விஞ்ஞானி’ என்றும் பலராலும் விமர்சிக்கப்பட்ட செல்லூர் ராஜூவும் கூட, என்னை விடவும் தாண்டிய விஞ்ஞானி என்று செந்தில்பாலாஜியை விமர்சித்தார்.

அணில்களை முதலில் கையில் எடுத்தது அதிமுகவா? திமுகவா?

தொடர்ந்து இப்படி விமர்சனம் வந்த நிலையில், ராமேஸ்வரம் முதல் இலங்கை வரைக்கும் அணில்கள் பாலம் அமைத்திருக்கும்போது ஏன் மின்சார வயரை கடிக்காதா என்ன? என்று திமுகவினர் பதிலடி கொடுத்தனர்.

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, மின்வெட்டு குறித்து உரிய பதில் அளிக்கவில்லை… நாட்டில் விஞ்ஞானம் வளர்ந்துள்ள நிலையில் மின்வெட்டுக்கு அணில் மீது பழிபோடுவது ஏற்க முடியாது. இதனை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

அணில்களை முதலில் கையில் எடுத்தது அதிமுகவா? திமுகவா?

இதையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’13 அப்பாவி தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதை டிவி பார்த்து தெரிந்துக்கொண்ட, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கண்டுப்பிடித்த எடப்பாடி பழனிச்சாமி, இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் டிவியை பார்த்து மின்தடை இருப்பதை கண்டறிந்திருக்கிறார். முதலில் எடப்பாடி பழனிச்சாமி யின் ஆட்சியில் மின் உற்பத்திக்காக துவங்கப்பட்ட புதிய மின் திட்டங்கள் எவை? திட்டங்களின் மதிப்பீடு என்ன? அதற்காக செலவு செய்யப்பட தொகை எவ்வளவு? அந்த திட்டங்களின் இன்றைய நிலையென்ன என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ’’என்ற கேள்வியை எழுப்பினார்.

அணில்களை முதலில் கையில் எடுத்தது அதிமுகவா? திமுகவா?

மேலும், ‘’மேதகு ஆளுநர் உரையில் குறிப்பிட்டது போல் கடந்தகால ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகள், தவறுகள், நிதிநெருக்கடிகள் தொடர்பாக மின் துறையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் மின்தடை ஏற்பட்டிருக்கின்றனவென எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலேயே உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தீர்கள்.‌ அது பொய்யா? ’’ என்று கேட்டிருக்கிறார்.

அணில்களை முதலில் கையில் எடுத்தது அதிமுகவா? திமுகவா?

தொடர்ந்து, ‘’மின் பராமரிப்பு பணிகளுக்காக 19.06.2021 முதல் 28.06.2021 வரை 10 நாட்களாக மின்வாரியம் எடுத்துக் கொண்ட பணிகள் 2,28,000ஆயினும் முடிக்கப்பட்ட பணிகள் 2,71,000. ஏறத்தாழ 42,000 கூடுதலாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனை முதலில் அறிந்துக்கொள்ளுங்கள். ஆயினும் அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வேறுபாடு தெரியாத எடப்பாடி பழனிச்சாமி.. உங்களுக்கு இதெல்லாம் புரிந்தாலே ஆச்சரியம்’’என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இதனால், மின் தடைக்கு அணில்கள் காரணம் என்பதை முதலில் கையில் எடுத்தது அதிமுகவா? திமுகவா? என்ற பெரும் விவாதமே எழுந்திருக்கிறது இரு கட்சியினர் மத்தியிலும்.