அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகளை திருப்தி படுத்த ஸ்டாலின் எடுத்த முடிவு

 

அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகளை திருப்தி படுத்த ஸ்டாலின் எடுத்த முடிவு

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட திமுக கூட்டணியில் இடம்பெற்ற அனைத்து கட்சிகளுமே கடைசி வரைக்கும் ஒரு முடிவை எட்டாமல் கூட்டணி ஒப்பந்தம் ஏற்படாமல் இழுபறியில் இருந்துவந்தன. தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் கடைசிவரைக்கும் கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வந்தன. இப்போதிருக்கும் தலைவர்களுக்கு தலைமைப்பண்பு இல்லை என்று திருமாவளவன் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் கூட்டணி மாறி, வேறு கூட்டணிக்கு செல்வார்கள் என்ற பேச்சு எழுந்தது.

அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகளை திருப்தி படுத்த ஸ்டாலின் எடுத்த முடிவு

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறூகிறார்கள் என்ற பேச்சு எழுந்ததும், ம.நீ. ம. கமல்ஹாசனும் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் கடைசி கட்டத்தில் திமுக கொடுத்த இடங்களை வாங்கிக்கொண்டு கூட்டணி ஒப்பந்தம் முடிவானது. குறைவான இடங்கள் கிடைத்தாலும் வெற்றி கூட்டணியில் இருப்பதைத்தான் விரும்புகிறோம் என்று காரணம் சொன்னாலும், அவர்கள் அதிருப்தியில்தான் இருக்கிறார்களாம். இதை உணர்ந்த ஸ்டாலின் அதிருப்தியிலிருக்கும் கூட்டணிக் கட்சியினரை உள்ளாட்சி தேர்தலில் திருப்திப்படுத்த முடிவு செய்துள்ளார்.

அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகளை திருப்தி படுத்த ஸ்டாலின் எடுத்த முடிவு

சென்னை அறிவாலயத்தில் நேற்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தொடர்பாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகளை திருப்தி படுத்த ஸ்டாலின் எடுத்த முடிவு

ஸ்டாலின் இக்கூட்டத்தில் பேசிய போது, சட்டமன்றத் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. ஆனாலும் ஆட்சியைப் பிடித்து விட்டோம் அடுத்த தேர்தலில் இமாலய வெற்றி பெறும் அளவிற்கு மாவட்ட செயலாளர்கள் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர் மேலும், எதிர்க்கட்சியாக நாம் இருந்தபோது எந்த விமர்சனமும் வரவில்லை. ஆனால் ஆளுங்கட்சியாக இருப்பதால் சிறு துரும்பு பிரச்சனையையும் பெரிய பூதாகரமாக்கி விமர்சிப்பார்கள். அதற்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது என்றும், மா.செக்களை கேட்டுக்கொண்டாராம்.

அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகளை திருப்தி படுத்த ஸ்டாலின் எடுத்த முடிவு

சட்டமன்றத் தேர்தலின்போது சில மாவட்டச் செயலாளர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன அவர்கள் தங்களை இனியாவது திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் மா.செ.க்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்த்த தொகுதியை நிறைவேற்றித் தர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்து அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.