அந்த பூசாரி அடிக்கடி கனவில் வந்து ..இளம்பெண் குற்றச்சாட்டினால் அதிர்ந்த போலீசார்

 

அந்த பூசாரி அடிக்கடி கனவில் வந்து ..இளம்பெண் குற்றச்சாட்டினால் அதிர்ந்த  போலீசார்

குறி கேட்டுபோனபோது, கும்பிட போனபோது தன்னை பலாத்காரம் செய்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுகள்தான் இதுவரைக்கும் போலீசுக்கு போயிருக்கிறது. ஆனால், முதன் முறையாக கனவில் வந்து தன்னை பலாத்காரம் செய்தவதாக ஒரு பெண் போலீசுக்கு போயிருக்கிறார்.

அந்த பூசாரி அடிக்கடி கனவில் வந்து ..இளம்பெண் குற்றச்சாட்டினால் அதிர்ந்த  போலீசார்

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் பிரபலமானவர் பிரசாந்த் சதுர்வேதி பூசாரி. இவர் தனது கனவில் அடிக்கடி வந்து பாலியல் பலாத்காரம் செய்கிறார் இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், தனது மகன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பூசாரியிடம் அழைத்து சென்றிருந்தேன்.

சில மந்திரங்களையும் சொல்லிவரசொல்லி, சில சடங்களையும் செய்யச்சொல்லி சொன்னார். அதன்படியே செய்துவந்தேன். ஆனால், அப்படி இருந்தும் என் மகன் 15 நாளி இறந்துவிட்டான். நீங்க சொன்னபடிதானே செய்தேன். அப்படி இருந்தும் அவன் எப்படி இறந்தான் என்று பூசாரியிடம் நியாயம் கேட்டேன். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை என்றும் எழுத்து பூர்வமாக போலீசில் அளித்துள்ள புகாரில் சொல்லி இருக்கிறார்.

இதையடுத்து, பிரசாந்த் சதுர்வேதியிடம் சென்று போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது பூசாரி,அந்தப்பெண் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார்.

அப்புறம் எப்படி அந்த பெண் கடனவில் அடிக்கடி நீங்கள் வருவதாக சொல்லிறார்? என்று கேட்டதும், அதை நீங்கள் அந்த பெண்ணிடம்தான் கேட்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

பிரசாந்த் சதுர்வேதி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லாததால், பெண்ணிடம் சமாதானம் பேசி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் போலீசார்.