குழந்தைகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்து உடல்கள் மிதக்கும் வரை.. வெறித்து பார்த்துக் கொண்டிருந்த தாய்

 

குழந்தைகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்து உடல்கள் மிதக்கும் வரை.. வெறித்து பார்த்துக் கொண்டிருந்த தாய்

பெற்ற குழந்தைகளை கிணற்றுக்குள் வீசியதில் அக்குழந்தைகள் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்து உடல்கள் மேலே வந்து மிதக்கும் வரைக்கும் வெறித்து பார்த்து கொண்டிருந் திருந்கிறார். ஆட்கள் அருகே வந்ததும் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சொல்லிக்கொண்டு கிணற்றுக்குள் குதித்திருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குழந்தைகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்து உடல்கள் மிதக்கும் வரை.. வெறித்து பார்த்துக் கொண்டிருந்த தாய்

ஆரணி அருகே பெரிய அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி புஷ்பலதா. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இத்தம்பதிக்கு ஒரு வயதில் ஒரு மகளும், இரண்டு வயதியில் ஒரு மகளும் இருந்தனர்.

புஷ்பலதாவுக்கும் மாமியாருக்கும் இடையே அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது. அருள்ராஜும் புஷ்பலதாவுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

குழந்தைகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்து உடல்கள் மிதக்கும் வரை.. வெறித்து பார்த்துக் கொண்டிருந்த தாய்

நேற்றைக்கும் இந்த குடும்ப சண்டை நடந்திருக்கிறது. சண்டை முற்றியதில் ஆத்திரம் அடைந்த புஷ்பலதா, குழந்தைகளோடு தானும் தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு சென்றிருக்கிறார்.

கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக இருந்த கிணற்றில் குழந்தைகளை வீசியிருக்கிறார். குழந்தைகளை வீசிய வேகத்தில் புஸ்பலதாவும் கிணற்றில் குதிக்கவில்லை. குழந்தைகள் கிணற்று தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்து உடல்கள் மிதக்கும் வரைக்கும் வெறித்து பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார்.

குழந்தைகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்து உடல்கள் மிதக்கும் வரை.. வெறித்து பார்த்துக் கொண்டிருந்த தாய்

அந்த பக்கமாக போனவர்கள், புஷ்பலதா கிணற்று ஓரமாக நிற்பதை பார்த்துவிட்டு, சந்தேகத்தில் அருகே வந்துள்ளனர். அவர்கள் அருகே வந்ததும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர்களிம் கூறிவிட்டு கிணற்றில் குதித்துள்ளார் புஷ்பலதா.

எல்லோரும் ஓடிவந்துபார்த்த போது அதிர்ந்தனர். குழந்தைகள் உடல் மிதந்துகொண்டிருந்தது. தத்தளித்துக்கொண்டிருந்த புஷ்பலதாவை மீட்டனர். குழந்தைகளின் உடலையும் மீட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டமங்கலம் போலீசார், புஷ்பலதாவிடமும், அவரது வீட்டில் இருப்போரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப சண்டையில் அப்பாவி பிஞ்சுகளை கொலை செய்த புஷ்பலதாவை அக்கிராமமே திட்டி தீர்க்கிறது.