சென்னையில் கொரோனா தொற்று உறுதியான 277 பேர் மாயம்- மாநகராட்சி

 

சென்னையில் கொரோனா தொற்று உறுதியான 277 பேர் மாயம்- மாநகராட்சி

தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக புதிதாக 1,974 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,415 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று உறுதியான 277 பேர் மாயம்- மாநகராட்சி

இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 277 கொரோனா மாயமானதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், ‘சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் மாயமாகி விட்டனர். தவறான முகவரி மற்றும் செல்போன் எண்களை கொடுத்துவிட்டு மாயமாகி விட்ட அந்த 277 பேரை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவக்கூடும் என அஞ்சப்படுகிறது.