சொன்னதை எல்லாம் காற்றில் பறக்கவிடுகிறார்; வெட்கக்கேடானது – முதல்வருக்கு சீமான் கடும் கண்டனம்

 

சொன்னதை எல்லாம் காற்றில் பறக்கவிடுகிறார்; வெட்கக்கேடானது  – முதல்வருக்கு சீமான் கடும் கண்டனம்

கொரோனா இரண்டாவது அலைப்பரவலினால் தமிழகம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்து நிற்கையில், நோய்த்தொற்று பரவல் விகிதம் அதிகமாகாமலிருந்தாலும் இறப்பு விகிதம் குறையவில்லை என்று வரும் முடிவுகள் பெருங்கவலையைத் தருகின்றன என்று சொல்லும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

சொன்னதை எல்லாம் காற்றில் பறக்கவிடுகிறார்; வெட்கக்கேடானது  – முதல்வருக்கு சீமான் கடும் கண்டனம்

கொரோனா நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை உள்ளது உள்ளபடியே அறிவிப்பதன் மூலமே தொற்றுப்பரவலின் தீவிரத்தையும், வீரியத்தையும் உணர்ந்து அதற்கேற்றார் போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மக்களை விழிப்பூட்டவும் முடியும் எனும்போது அதனைச் செய்ய மறுத்து, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த கூடாதென்பதற்காக உண்மையான இறப்பு எண்ணிக்கையை மறைப்பதென்பது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் பேராபத்தாகும் என்று எச்சரிக்கிறார்.

கொரோனா உயிரிழப்புகள் குறித்து, சமூகநல அமைப்பான அறப்போர் இயக்கம் கள ஆய்வு மூலம் வெளியிட்டுள்ள தகவல்கள், ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேலான கொரோனா உயிரிழப்புகள் குறைத்துக் காட்டப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றது. இது அரசு அறிவித்துள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விடப் பத்து மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தோடு, ஊடகவியலாளர் சந்தியா ரவிசங்கர் அவர்களும் புள்ளி விவரங்களோடு இறப்பு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதை உறுதிப்படுத்துகிறார் என்பதை எடுத்துக்காட்டும் சீமான்,

அதிமுகவுக்கு மாற்று நாங்கள் தானெனக்கூறி, ஆட்சியதிகாரத்திற்கு வந்த திமுக, அதிமுக செய்த அதே பெருந்தவறை செய்து மக்களின் உயிரை துச்சமாகக் கருதுவது வெட்கக்கேடானது என்று கடுமையான சாடுகிறார்.

சொன்னதை எல்லாம் காற்றில் பறக்கவிடுகிறார்; வெட்கக்கேடானது  – முதல்வருக்கு சீமான் கடும் கண்டனம்

கொரோனா காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்துக் காட்டுவதினால் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்க அரசே மறைமுகக்காரணமாவது மட்டுமின்றி, கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எவ்விதத் துயர் துடைப்பு உதவிகளும் கிடைக்கப்பெறாது போவதற்குக் காரணமாக அமைகிறது என்று கவலை தெரிவிக்கும் சீமான்,

அரசின் இத்தகைய மோசமான அணுகுமுறையாலும், நிர்வாக முறையாலும் கொரோனா பெருந்தொற்றினால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவிகள் பெறுவதில் பெருஞ்சிக்கல் நிலவுகிறது. இதனால், அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற முதல் நாளன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் தான் புகழுரையையோ, பொய்யுரையையோ எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லையென்றும், முழு உண்மையை நேருக்கு நேர் சந்திப்போம் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின், தான் கூறியவற்றை வெறும் வெற்று வார்த்தைகளாகக் காற்றில் பறக்கவிடுவது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது என்கிறார்.

ஆகவே, இரண்டாவது அலைப்பரவலில் தமிழகத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை முழுமையாக ஆய்வுசெய்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறார்.