அவ்வளவு முக்கியமா என்று கேட்டு ரஜினியின் அமெரிக்க பயணத்திற்கு அனுமதி மறுப்பா?

 

அவ்வளவு முக்கியமா என்று கேட்டு ரஜினியின் அமெரிக்க பயணத்திற்கு அனுமதி மறுப்பா?

ரஜினிகாந்த் அமெரிக்க பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், ’அவ்வளவு முக்கியமா’ என்று கேட்டு ரஜினியின் அமெரிக்க பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறது. அமைச்சர்கள் அனுமதி அளித்தும் கூட, கடைசி நேரத்தில் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்.

அவ்வளவு முக்கியமா என்று கேட்டு ரஜினியின் அமெரிக்க பயணத்திற்கு அனுமதி மறுப்பா?

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை செய்துகொண்டு அங்கேயே சில நாட்கள் ஓய்வெடுத்து பின்னர் தமிழகம் திரும்பினார். அதன்பின்னர் அவர் மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்தபோது கொரோனா வந்துவிட்டது. இதனால் அவரின் அமெரிக்க பயணம் கடந்த ஆண்டு தடைபட்டது. இந்த ஆண்டும் கொரோனா 2வது அலை வந்ததால் அவர் கவலையுற்றார். இந்த அலை ஓய்ந்தபின்னர் அமெரிக்கா செல்லலாம் என்று நினைத்திருந்தவருக்கு, கொரோனா 3வது அலையும் வருகிறது என்ற தகவலால், இனியும் அமெரிக்க பயணத்தை தள்ளிப்போட அவர் விரும்பவில்லை.

அவ்வளவு முக்கியமா என்று கேட்டு ரஜினியின் அமெரிக்க பயணத்திற்கு அனுமதி மறுப்பா?

அமெரிக்கா செல்வதற்காகவே அவர் விரைந்து அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுத்துள்ளார். ஆனாலும் இன்னமும் படத்தின் டப்பிங் வேலைகள் முடியவில்லை. டப்பிங் வேலைகள் தொடங்குதற்குள் அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் ரஜினிகாந்த் தனிவிமானத்தில் அமெரிக்கா செல்ல திட்டமிருந்தார். 14 பேர் வரைக்கும் பயணம் செய்யக்கூடிய அந்த சிறப்பு தனி விமானத்தில் தன்னுடன் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்ல ரஜினி முடிவெடுத்திருந்தார்.

சிறப்பு தனி விமானத்தில் செல்வதற்காக மத்திய அரசு அனுமதி தர வேண்டும். இதற்காக, இரண்டு மத்திய அமைச்சர்களிடம் பேசி அனுமதி வாங்கியிருந்தார் ரஜினி. இதனால் விரைவில் ரஜினியின் அமெரிக்க பயணம் இருக்கும் என்று தகவல் வெளியானது. ஆனால், அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனராம்.

அவ்வளவு முக்கியமா என்று கேட்டு ரஜினியின் அமெரிக்க பயணத்திற்கு அனுமதி மறுப்பா?

ரஜினியுடன் 14 பேர் பயணம் செய்வார்கள் என்ற பட்டியல் அதிகாரிகள் கைக்கு சென்றவுடன், ’’இந்த 14 பேரும் அவ்வளவு முக்கியமா?’’ என்று கேட்டிருக்கிறார்களாம் அதிகாரிகள். ரஜினிகாந்த் இந்தியாவின் பிரபலம், அவருக்கு உடல்நலக்குறைவு என்பதற்காக சிகிச்சை மேற்கொள்ள அவர் செல்கிறார். ஆனால், மற்ற 13 பேர் எதற்கு? என்கிற ரீதியிலேயே அதிகாரிகளின் கேள்வி இருந்திருக்கிறது.

மேலும், ரஜினிகாந்த் கோவேக்சின் ஊசி போட்டிப்பதால், அது தடுப்பூசி பட்டியலில் வராது என்றும் சொல்லி, அனுமதியை நிராகரித்துள்ளார்களாம் அதிகாரிகள்.

அமைச்சர்கள் அனுமதி அளித்தும், கடைசி நேரத்தில் தனது பயணத்திற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதால் அப்செட்டில் இருக்கிறாராம் ரஜினி.