இவர்களுக்கு கொரோனா வந்தால் கண்பார்வை பிரச்சனை ஏற்படும்

 

இவர்களுக்கு கொரோனா வந்தால் கண்பார்வை பிரச்சனை ஏற்படும்

கொரோனா தொற்று வந்து அதனால் பாதிக்கப்படுவது ஒருபக்கம் இருக்க, அந்த கொரோனாவினால் பின் விளைவுகளையும் சந்திக்க வேண்டியதிருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு கறுப்பு பூஞ்சை உள்ளிட்ட புதிது புதிதாக வேறு வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இவர்களுக்கு கொரோனா வந்தால் கண்பார்வை பிரச்சனை ஏற்படும்

கொரோனா பாதிப்பு வந்துவிட்டால் கண் பார்வை பிரச்சனை ஏற்படுமா என்ற சந்தேகம் பலரிடையே எழுந்திருக்கிறது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா வந்தால் கண்ணுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளனர். அதே நேரம், ஏற்கனவே கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதையும் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் குணப்படுத்தி விடலாம் என்கிறனர்.