’’நிதானத்தில் இருக்கும்போது அவர் இப்படி பேசவே மாட்டார்’’

 

’’நிதானத்தில் இருக்கும்போது அவர் இப்படி பேசவே மாட்டார்’’

அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசுவதாக தினமும் ஒரு ஆடியோ வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதிமுகவுக்கு தான் தலைமையேற்க வருவதாக அந்த ஆடியோவில் சொல்லி வருகிறார் சசிகலா. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை. அது நிச்சயம் நடக்காது என்று அடித்துச்சொல்கின்றனர் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர்.

’’நிதானத்தில் இருக்கும்போது அவர் இப்படி பேசவே மாட்டார்’’

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கருவாடு மீன் ஆனாலும் ஆகலாமே தவிர சசிகலா அதிமுகவிற்கும் ஒருபோதும் வரமுடியாது என்று ஆவேசக்குரலில் அழுத்தம் திருத்தமாக சொன்னார்.

’’நிதானத்தில் இருக்கும்போது அவர் இப்படி பேசவே மாட்டார்’’

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சசிகலாவின் ஆதரவாளர் தேனி கர்ணன், ‘’முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இப்படி பேசுகிறார் என்றால், அவர் சாதாரணமாக இப்படி பேசுபவர் அல்ல. நிதானத்தில் இருக்கும்போது அவர் இப்படி பேசவே மாட்டார். அவருக்கு மட்டும் இந்த ஊரடங்கில் எங்கே டாஸ்மாக் திறந்து இருக்கிறது என்று தெரியவில்லை. அவர் சாதாரண நிலையில் அதைச் சொல்லவில்லை’’ என்று சொல்கிறார்.

’’நிதானத்தில் இருக்கும்போது அவர் இப்படி பேசவே மாட்டார்’’

மது போதையில் தான் சி.வி. சண்முகம் அப்படி உளறியிருப்பதாக குறிப்பிடுகிறார் தேனி கர்ணன்.