என்ன இலாபமடா உங்களுக்கு? கொந்தளிக்கும் திரைப்பட இயக்குநர்கள்

 

என்ன இலாபமடா உங்களுக்கு? கொந்தளிக்கும் திரைப்பட இயக்குநர்கள்

நடிகை சமந்தா நடித்துள்ள தி ஃபேமிலி மேன்-2 என்ற சர்ச்சைக்குரிய வெப் தொடர் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானதும், அதில் சமந்தா தமிழீழப் போராளியாக நடித்துள்ளதும் வரலாற்றை திரித்து கூறியிருப்பதாக இயக்குநரும் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் முதலில் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

என்ன இலாபமடா உங்களுக்கு? கொந்தளிக்கும் திரைப்பட இயக்குநர்கள்

சீமானை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அத்தொடருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரையுலக இயக்குநர்கள் அத்தொடருக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

என்ன இலாபமடா உங்களுக்கு? கொந்தளிக்கும் திரைப்பட இயக்குநர்கள்

எம் தமிழர் வரலாற்றைத் திரித்து எடுப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு?? இவர்கள் திரிப்பதை எல்லாம் சரிசெய்து உண்மையான வரலாற்றைப் பதிவுசெய்ய தமிழ்ப் படைப்பாளிகளும்… உலகத் தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும். #நம்வரலாற்றைநாமேஎழுதுவோம் என்கிறார் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி.

என்ன இலாபமடா உங்களுக்கு? கொந்தளிக்கும் திரைப்பட இயக்குநர்கள்

தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப் தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் பிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை என்று உறுதியாக தெரிவித்திருக்கிறார் இயக்குநர் சேரன்.

தமிழ் போராளிகளின் போராட்டங்கள், சித்தாந்தங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமலும், அவர்களால் இப்பவும் எந்த நேரத்திலும் ஆபத்து என்பது போலவும் போராளிகள் பற்றிய ஒரு பொது புத்தியில் எடுக்கப்பட்ட வெப் தொடர் ‘தி பேமிலி மேன் – 2’ வெப் தொடர். #FamilyMan2AgainstTamils என பதிவிட்டுள்ளார் ‘ராட்சசன்’ பட இயக்குநர் ராம் குமார்.

என்ன இலாபமடா உங்களுக்கு? கொந்தளிக்கும் திரைப்பட இயக்குநர்கள்

எங்கள் இனத்திற்கு எதிரான ‘தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ள இயக்குநர் பாரதிராஜா, தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக் களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத, தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

என்ன இலாபமடா உங்களுக்கு? கொந்தளிக்கும் திரைப்பட இயக்குநர்கள்

அவர் மேலும், இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மாண்புமிகு திரு. பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட வேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லிம், வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள். ‘தி பேமிலி மேன் 2’ தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன் என்கிறார்.