விஜயகாந்தின் கண்களை… இளைய மகனின் பாசம்
விஜயகாந்தின் கண்களை கையில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார் அவரது இளைய மகன் சண்முகபாண்டியன். இதை தந்தையிடம் காட்டி பெருமிதப்படுகிறார். மகனின் பாசத்தைப்பார்த்து நெகிழ்கிறார் விஜயகாந்த். இந்த புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.
லண்டனில் தமிழன் என்று சொல் படப்பிடிப்பில் இருந்து இன்று சென்னை வந்தடைந்தேன். லண்டனில் என் தந்தையின் கண்களை, கைகளில் ‘டாட்டு’ வரைந்ததை அவரிடம் காட்டி உள்ளம் மகிழ்ந்தேன். பல மாதங்களுக்கு பிறகு எனது தந்தையை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது… விஜயகாந்தின் கண்களை கையில் பச்சைக்குத்திகொண்ட படங்களை வெளியிட்டிருந்தர் சண்முகபாண்டியன்.
கடந்த 29.5.2018ல் அவர் இவ்வாறு பதிவிட்டிருந்தார். அப்போது இந்த புகைப்படங்கள் இணையங்களில் வைரலானது. தற்போது மீண்டும் #Throwback2018 என்ற ஹேஸ்டேக்குடன் இன்றைய தினம் இப்புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.