இல்லங்களில் இருந்தபடியே மாவீரன் குருவுக்கு மரியாதை செலுத்துவோம்…ராமதாஸ்

 

இல்லங்களில் இருந்தபடியே மாவீரன் குருவுக்கு மரியாதை செலுத்துவோம்…ராமதாஸ்

பாமகவின் முன்னணி தலைவராகவும், வன்னியர் சங்கத்தின் மாநில தலைவராகவும் இருந்த காடுவெட்டி ஜெ.குரு கடந்த 2018ம் ஆண்டு மே 25ம் தேதி அன்று உடல்நலக்குறைவால் காலமானார். ஜெ.குருவின் மூன்றாவது நினைவு நாள் இன்று.

இல்லங்களில் இருந்தபடியே மாவீரன் குருவுக்கு மரியாதை செலுத்துவோம்…ராமதாஸ்

இதைமுன்னிட்டு, பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியினருக்கு விடுத்த வேண்டுகோள் கடிதத்தில், ‘’நமது நெஞ்சங்களில் நிறைந்த, மறைந்த வன்னியர்சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குருவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. கொடிய கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் காடுவெட்டியில் உள்ள நினைவு மண்டபத்திலும், திண்டிவனம் ஒலக்கூரில் கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள மாவீரனின் உருவச்சிலைக்கும் அங்குள்ள பராமரிப்பாளர்கள் மூலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தத்தமது இல்லங்களிலேயே மாவீரன் குருவுக்கு மரியாதை செலுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.