வெயில் கொடுமை தாங்க முடியாமல் சென்னையில் பெண் தீக்குளித்து தற்கொலை

 

வெயில் கொடுமை தாங்க முடியாமல் சென்னையில் பெண் தீக்குளித்து தற்கொலை

வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் சென்னையில் பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வெயில் கொடுமை தாங்க முடியாமல் சென்னையில் பெண் தீக்குளித்து தற்கொலை

சென்னை போரூர் அடுத்த காரப்பாக்கத்தில் வசித்து வந்த மஞ்சுளா(45), கடந்த சில தினங்களாக வெயில் வெப்பம் தாங்க முடியாமல் எரிச்சல் அடைந்து வந்துள்ளார். வெயிலின் வெப்பத்தினால் உடல் எரிச்சல் அடைவதாக புலம்பி வந்துள்ளார்.

இந்நிலையில், வெயிலின் வெப்ப எரிச்சல் தாங்க முடியவில்லை என்று அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வந்தாலும் சென்னையில் கோடை வெய்யில் மக்களை வாட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது. அதற்காக ஒரு பென் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிரவைக்கிறது. வெயில் வெப்பம் எரிச்சலை தாங்க முடியாமல் மொத்த உடலும் எரிந்தபோது எப்படி தாங்கக்கொண்டாரோ தெரியவில்லையே என்று வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.