மூதாட்டி வீட்டின் கதவை உடைத்து 26 சரவன் நகைகள் கொள்ளை!

 

மூதாட்டி வீட்டின் கதவை உடைத்து 26 சரவன் நகைகள் கொள்ளை!

தென்காசி

சங்கரன்கோவிலில் மூதாட்டி வீட்டு கதவை உடைத்து 26 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் பாரதியார் நகரை சேர்ந்தவர் வசந்தா(60). இவர் நேற்று முன்தினம் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இதனை அறிந்த மர்மநபர்கள், நள்ளிரவில் வசந்தா வீட்டின் பின் கதவை உடைத்து, 3 பீரோக்களில் இருந்த 26 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

மூதாட்டி வீட்டின் கதவை உடைத்து 26 சரவன் நகைகள் கொள்ளை!

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டிற்கு வந்த வசந்தா, கதவை திறந்து பார்த்தபோது, பீரோக்கள் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சங்கரன் கோயில் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கைரேகை பதிவுகளை சேகரித்தனர். தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.