என் வாழ்க்கையில் முதல் முறையாக அதிர்ந்தேன் – சூப்பர் ஹீரோ முகேஷ் கண்ணா

 

என் வாழ்க்கையில் முதல் முறையாக அதிர்ந்தேன் – சூப்பர் ஹீரோ முகேஷ் கண்ணா

சக்திமான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து 90களில் குழந்தைகளின் சூப்பர் ஹீரோவாக ஆனார் முகேஷ் கண்ணா. சக்திமானை அடுத்து இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துவிட்டதாக தகவல் பரவியது. அது வதந்தி என்று முகேஷ் கண்ணாவே விளக்கம் அளித்திருக்கிறார்.

என் வாழ்க்கையில் முதல் முறையாக அதிர்ந்தேன் – சூப்பர் ஹீரோ முகேஷ் கண்ணா

அவர் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளி்த்திருக்கிறார். ‘’எனது மரணம் குறித்த தவறான செய்திகள் வந்தன. இதையடுத்து ரசிகர்களூக்கு அது வதந்தி என்று உண்மையைச் சொல்ல நான் ரொம்பவே சிரமப்பட்டேன். இதுமாதிரியான வதந்தி பரப்புவோரை பிடித்து அடிக்க வேண்டும் போலிருக்கிறது’’என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

அவர் மேலும், ஆனால், எனக்கும் ஒரு துக்கம் நேர்ந்திருக்கிறது. எனது ஒரே மூத்த சகோதரி கமல் கபூர் டெல்லியில் காலமானார். அவரது மரணத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன். கொரோனா தொற்று பாதித்த பின்னரும், 12 நாள் சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவை வென்றுவிட்டார். ஆனால், நுரையீரலின் தாக்கத்தால் அவர் உயிரிழந்துவிட்டார். நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக அதிர்ந்தேன்.
’’என்று தெரிவித்திருக்கிறார்.