டாஸ்மாக் போல பெட்ரோல், டீசல் வருமானம் பெருக்கும் வழிகளா? :கமல்ஹாசன் அச்சம்

 

டாஸ்மாக் போல பெட்ரோல், டீசல் வருமானம் பெருக்கும் வழிகளா? :கமல்ஹாசன் அச்சம்

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. கடந்த 66 நாட்களாக உயராமல் இருந்த நிலை தேர்தல் முடிந்ததும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் போல பெட்ரோல், டீசல் வருமானம் பெருக்கும் வழிகளா? :கமல்ஹாசன் அச்சம்

கொரோனா முதல் அலையில் மூழ்கிய பொருளாதாரம் மீளாத நிலையில் மக்கள் வேலை இழப்பு, வருவாய் இழப்பு, மருத்துவ செலவுகள் என அல்லற்பட்டு வருகிறார்கள். இரண்டாவது அலை ஒரு சுனாமியைப் போல தாக்கி தமிழக மக்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல பெட்ரோல் டீசல் விலை உயர்வு வேதனையளிக்கிறது.

சாமானிய மக்களின் மீது மேலும் மேலும் சுமை ஏற்றப்படுகிறது. எரிபொருட்களின் விலை ஏற்றத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பது ஆட்சியாளர்கள் நன்றிந்ததே.

டாஸ்மாக் மது விற்பனையை வருவாய் வாய்ப்பாக கருதுவதைப்போல எரிபொருள் நிரப்பும் நிலையங்களையும் வருமானத்தைப் பெருக்கும் வழிகளாக மத்திய, மாநில அரசுகள் கருதுகின்றனவோ எனும் அச்சம் ஏற்படுகிறது.

மத்திய அரசிற்கு எரிபொருட்களின் விலையை குறைக்கும் எண்ணம் இருப்பது போலவே தெரியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலையை குறைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் மக்களின் சுமையை குறைக்க வேண்டும்’’என்று வலியுறுத்தி இருக்கிறார்.