மீளாத்துயரில் வாடும் வானதி சீனிவாசனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்..ஓபிஎஸ்

 

மீளாத்துயரில் வாடும் வானதி சீனிவாசனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்..ஓபிஎஸ்

கடந்த பத்து நாட்களாக கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த யுவராஜ், திடீரென உடல்நிலை மோசமாகி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு காலமானார். அவரது மறைவு குறித்து வானதி சீனிவாசன், எனதன்பு தம்பி யுவராஜ் இன்று கொரானாவால் இவ்வுலகை விட்டு பிரிந்தான். “எம் அக்கா” என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தவன், என் நிழலாக வாழ்ந்தவன், எனக்கு தீராத துக்கமாக மாறினான்…..ஓம்சாந்தி என்று துக்கமுடன் தெரிவித்திந்தார்

மீளாத்துயரில் வாடும் வானதி சீனிவாசனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்..ஓபிஎஸ்

வானதி சீனிவாசன் அவர்களின் அன்புத்தம்பி, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிட்ட போது உடனிருந்து தேர்தல் வேலைகளை பொறுப்பாக செய்தவர். இந்த தேர்தல் மட்டுமல்ல, கடந்த 8 ஆண்டுகளாக வானதி சீனிவாசனின் அனைத்து அரசியல் பயணங்களிலும், தேர்தல்களிலும், யாத்திரைகளிலும் அவர் சொன்னது போல நிழலாகவே தொடர்ந்து உடனிருந்தார் என்று பலரும் இரங்களில் தெரிவித்து வருகின்றனர்.

பா.ஜ.க தமிழ் மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தன் முகநூல் இரங்கல் பதிவில், “யுவராஜ் பெயரில் மட்டுமல்ல நடை உடை பாவனையிலும் நீ யுவராஜ்தான் கொரோனா காலன் உன்னை கொண்டு சென்றுவிட்டான் எனும் செய்தி நெஞ்சம் வெடித்தது.” என்று உருகியுள்ளார்.

“நான் இறைவனை வெறுத்த நாள் இன்று…” என்று பதிவிட்டுள்ளார் யுவராஜின் நண்பரும் தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத்தின் தலைவருமான ம வெங்கடேசன். க

மீளாத்துயரில் வாடும் வானதி சீனிவாசனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்..ஓபிஎஸ்

டைசி வரை வானதி சீனிவாசன் அவர்களின் வெற்றி செய்தியையும், பதவியேற்பதையும் காணாமலேயே சென்று விட்டார் யுவராஜ். இறைவனுக்கு அப்படி என்ன அவர் மீது வாஞ்சையோ? இன்னும் குறைந்தது 50 வருடங்கள் வாழ்ந்திருக்க வேண்டியவர். திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினராக வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி பல ஆண்டுகளாக போராடி வந்த அவர் “யுவராஜ் பச்சையப்பன் என்னும் நான்” என்ற வாசகங்களை தன் வாழ்நாளில் சொல்வதற்கு முன்பாகவே மறைந்து பா.ஜ.க-வினரை ஆழ்ந்த துயரத்தில் தள்ளியுள்ளார்.

பாஜக மகளிரணி தேசியத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புச்சகோதரி திருமதி.வானதி சீனிவாசன் அவர்களின் சகோதரர் திரு.யுவராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது பிரிவால் மீளாத்துயரில் வாடும் வானதி சீனிவாசன் அவர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.