வானதி சீனிவாசன் தம்பி கொரோனாவால் மரணம்: காங்., எம்.பி இரங்கல்

 

வானதி சீனிவாசன் தம்பி கொரோனாவால் மரணம்: காங்., எம்.பி இரங்கல்

பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வானதி சீனிவாசன் இன்று சட்டமன்ற பேரவையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

வானதி சீனிவாசன் தம்பி கொரோனாவால் மரணம்: காங்., எம்.பி இரங்கல்

வானதி சீனிவாசன் பதவி பிரமாணம் செய்துகொண்ட மகிழ்ச்சியாக தருணத்தில் அவர் துக்கத்தில் இருக்கிறார். அது குறித்து அவர், எனதன்பு தம்பி யுவராஜ் இன்று கொரானாவால் இவ்வுலகை விட்டு பிரிந்தான். “எம் அக்கா” என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தவன், என் நிழலாக வாழ்ந்தவன், எனக்கு தீராத துக்கமாக மாறினான்…..ஓம்சாந்தி. என்று துக்கமுடன் தெரிவித்திருக்கிறார்.

யுவராஜின் மரணம் குறித்து கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ’’யுவராஜின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்’’என்று தெரிவித்துள்ளார்.