’’மண்ணையும், பெண்ணையும் பறிக்க திமுக தயாராகிவிட்டது’’- காயத்ரி ரகுராம்

 

’’மண்ணையும், பெண்ணையும் பறிக்க திமுக தயாராகிவிட்டது’’- காயத்ரி ரகுராம்

சத்துணவு திட்டம் போல அம்மா உணவகம் திட்டம் மக்களிடையே அதிக வரவேற்பினை பெற்றது.

திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் திடீரென்று இன்று சென்னை மதுரவாயல் தொகுதியில் உள்ள அம்மா உணவகத்தினை திமுகவினர் அடித்து நொறுக்கி சூறையாடியதாக வீடியோ ஒன்று வைரலானது.

’’மண்ணையும், பெண்ணையும் பறிக்க திமுக தயாராகிவிட்டது’’- காயத்ரி ரகுராம்

’’இன்னைக்கு அம்மா உணவகம் நாளை உன் வீடு, உன் வீட்டு பெண்கள், இது தான் தி. மு. க’’ என்று ஆவேசமாகிறார் கிஷோர் கே.சாமி.

தமிழக பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம், ’’மண்ணையும், பெண்ணையும் பறிக்க திமுக தயாராகிவிட்டது. மக்களே உஷார்.’’என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து டுவிட்டரில், #அம்மாஉணவகம்காப்போம் என்ற ஹேஷ்டேக் ஷேர் ஆகி வருகிறது.

விவகாரம் பெரிதாவதை உணர்ந்த திமுகவி மூத்த நிர்வாகி மா.சுப்பிரமணியன், ‘’மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்’’என்று சொல்லி, மீண்டும் பெயர்ப்பலகையை வைத்த வீடியோவினையும் வெளியிட்டிருக்கிறார்.