’’பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன்..’’- நடிகர் சிம்பு உருக்கம்

 

’’பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன்..’’- நடிகர் சிம்பு உருக்கம்

மனம் நம்ப மறுக்கிறது. பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன் என்று மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு நடிகர் சிலம்பரசன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

’’பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன்..’’- நடிகர் சிம்பு உருக்கம்

அவர் மேலும் தனது இரங்கலில், ’’தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது . மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை தம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே வி ஆனந்த் அவர்கள். ’கோ’ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும் படியாகிவிட்டது . சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன்.

’’பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன்..’’- நடிகர் சிம்பு உருக்கம்

தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்து விட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது. பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன், இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே வி ஆனந்த் அவர்கள் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார். அவசரமாகப் பயணித்துவிட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு. அவரை இழுந்து நிற்கும் குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் , திரையுலகினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுளின் கரங்களில் இளைப்பாறட்டும்.’’என்று உருக்கமுடன் தெரிவித்திருக்கிறார்.

’’பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன்..’’- நடிகர் சிம்பு உருக்கம்