அதிமுக ஆட்சியின் ‘எக்ஸிட்’ : விசிக எம்.பி. அடித்த கமெண்ட்

 

அதிமுக ஆட்சியின் ‘எக்ஸிட்’ : விசிக எம்.பி.  அடித்த கமெண்ட்

தமிழக சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலுக்கு பிந்தைய வாக்குகணிப்பு முடிவுகள் இன்று வெளியானது.

அதிமுக ஆட்சியின் ‘எக்ஸிட்’ : விசிக எம்.பி.  அடித்த கமெண்ட்

ஆக்சிஸ் மை -இந்தியா டுடே, நியூஸ் -24 மற்றும் டுடே சாணக்யா, ரிபப்ளிக் – சி.என்.எக்ஸ் பல்வேறு தரப்பும் இன்று வெளியிட்ட கணிப்பு முடிவுகள் எல்லாமே திமுக கூட்டணிதான் அதிக இடங்களை வெல்லும் என்று சொல்கிறது.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார், ’’தமிழ்நாட்டின் எக்ஸிட் போல் குறித்த எனது கணிப்பு எப்படி 100% சரியாக இருக்கிறதோ அப்படி மே 2 ஆம் தேதி இதைவிட அதிகமான இடங்களை திமுக அணி கைப்பற்றும் என்ற என் கணிப்பும் மெய்யாகும்’’ என்று சொல்கிறார்.

பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகும் முன்னதாகவே அவர், ’’ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ‘எக்ஸிட் போல்’ முடிவுகள் இன்று மாலை வெளியாகப்போகின்றன. அதிமுக ஆட்சியின் ‘எக்ஸிட்’ அவற்றில் உறுதியாகும். இன்று சொல்லப்படும் 160-170 எண்ணிக்கையைவிடக் கூடுதலான இடங்களில் திமுக அணி வெல்வதை மே-2ல் பார்ப்போம்.’’ என்று சொல்லி இருக்கிறார்.