தங்கையை கொலை செய்துவிட்டு அண்ணன் செய்த காரியம்; புதுக்கோட்டை அதிர்ச்சி

 

தங்கையை கொலை செய்துவிட்டு அண்ணன் செய்த காரியம்; புதுக்கோட்டை அதிர்ச்சி

புதுக்கோட்டையில் பொன் நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன். மின் வாரியத்தில் பணி புரிந்து வந்த பழனியப்பன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னாள் உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு மனைவி மற்றும் மகள் உண்டு.

20 வயதான மகள் லோகப்பிரியா புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் எம். காம் படித்து வருகிறார். பழனியப்பனின் மனைவி சிவசாமி வேலை செய்து வீட்டை காப்பாற்றி வருகிறார்.

தங்கையை கொலை செய்துவிட்டு அண்ணன் செய்த காரியம்; புதுக்கோட்டை அதிர்ச்சி

ஆண் துணை இல்லாததால் உறவினர் சுரேஷ், சிவசாமி -லோக பிரியாவுக்கு உதவியாக இருந்து வந்திருக்கிறார். லோகப்பிரியாவின் பெரியப்பா மகன் தான் சுரேஷ். இந்நிலையில் பழனியப்பன் மின்வாரியத்தில் பணியாற்றி வந்ததாலும், லோகப்பிரியா திருமண வயதில் இருப்பதாலும் லோகபிரியாவின் திருமணத்திற்காக பணம் -நகைகள் அதிகம் சேர்த்து வைத்திருப்பார்கள் என்று கணக்கு போட்ட சுரேஷ், அந்த பணம் நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்துள்ளான்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிவசாமி வேலைக்கு போய் விட்ட நிலையில், லோகப்பிரியா மட்டும் வீட்டில் இருந்தபோது சுரேஷ் வந்துள்ளான். லோக பிரியாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பணம், நகைக்காக வீடு முழுக்க தேடியுள்ளார். பீரோவில் வெறும் 2,000 மட்டுமே இருந்திருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு பிரியாவின் கழுத்திலிருந்த 9 கிராம் நகைகளை அறுத்துக் கொண்டு, லோகப்பிரிய ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டான் சுரேஷ்.

தங்கையை கொலை செய்துவிட்டு அண்ணன் செய்த காரியம்; புதுக்கோட்டை அதிர்ச்சி

வீடு திரும்பிய தாய் சிவசாமி கழுத்து அறுக்கப்பட்டு மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அலறியடித்துள்ளார். அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து போலீசுக்கு தகவல் கொடுக்கவும், அவர்கள் சுரேஷ் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டதை உறுதி செய்துள்ளனர்.

ஊதாரியான சுரேஷ் குடி பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதால் நிறைய கடன் தொல்லைகள் இருந்துள்ளன. அதை சமாளிக்க தங்கை என்றும் பாராமல் கொலை செய்துவிட்டு நகை, பணம் ,ஸ்கூட்டி யுடன் தலைமறைவாகி விட்டான் என்று போலீஸ் தரப்பில் நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

பணம் நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் தான் ஆண் துணை இல்லாத சிவசாமி ,லோக பிரியாவுக்கும் உதவி செய்வதாக சொல்லிக்கொண்டு சுரேஷ் நோட்டமிட்டு வந்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

பணத்துக்காக தங்கையையே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.