சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு!

 

சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தை உலுக்கி எடுத்து வருகிறது. நாள் தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் இந்த கொடிய வகை வைரசால் உயிரிழந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் உயிரிழப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குறிப்பாகச் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் சென்னையில் 1,992 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இருக்கும் சென்னை மக்களைக் காக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு!

இந்த நிலையில் சென்னையில் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேரும் கேஎம்சி மருத்துவமனையில் 4 பேரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் 5 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.