பூட்டிய வீட்டில் புகுந்து 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த திருடன்… மடக்கிப் பிடித்த போலீசார்!

 

பூட்டிய வீட்டில் புகுந்து 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த திருடன்… மடக்கிப் பிடித்த போலீசார்!

புதுச்சேரியில் பூட்டிய வீட்டில் 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரெஜினா பேகம் என்பவர் புதுச்சேரியின் வெங்கட்டா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். பணி தொடர்பாக கடந்த மே மாதம் டெல்லி ரெஜினா டெல்லி சென்றுள்ளார். அவரது வீடு பல நாட்களாக பூட்டியிருந்ததை நோட்டமிட்ட திருடன் ஒருவன் கடந்த ஜூலை 21-ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளான்.

பூட்டிய வீட்டில் புகுந்து 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த திருடன்… மடக்கிப் பிடித்த போலீசார்!
பூட்டிய வீட்டின் உள்ளே சத்தம் கேட்டதால் குடியிருப்பு காவலாளி சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த திருடன் வெளியே ஓடியுள்ளான். பின்னர் அந்த காவலாளி இதுகுறித்து பெரியகடை காவல் நிலையத்திற்கும், வீட்டின் உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார். ஊர் திரும்பிய வீட்டின் உரிமையாளர், வீட்டிலிருந்த 60 சவரன் நகை மற்றும் வெள்ளி லட்சம் மதிப்புள்ள பொருட்களைத் திருடிச் சென்று விட்டதாக புகார் அளித்துள்ளார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பூட்டிய வீட்டில் புகுந்து 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த திருடன்… மடக்கிப் பிடித்த போலீசார்!
சிசிடிவி ஆதாரங்களின் மூலம் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. கைதான சுரேஷிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.