திண்டுக்கல்: நவ.24 வேலைநிறுத்த போராட்டத்தில் சாலை பணியாளர் சங்கம் பங்கேற்பு

 

திண்டுக்கல்: நவ.24 வேலைநிறுத்த போராட்டத்தில் சாலை பணியாளர் சங்கம் பங்கேற்பு

திண்டுக்கல்லில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின், மாநில செயற்குழு கூட்டம் அந்த அமைப்பின் தலைவர் பாலசுப்ரமணி தலைமையில் நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதிலும் இருந்து 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல்: நவ.24 வேலைநிறுத்த போராட்டத்தில் சாலை பணியாளர் சங்கம் பங்கேற்பு

இந்த கூட்டத்தில், 41 மாதம் பணிநீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவித்து ஆணை வழங்கவும், சாலை பராமரிப்பு பணியை அரசே ஏற்று நடத்துதல் மற்றும் சாலை பணியாளர்களுக்கு விபத்து படி 10% வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 13 ஆம் தேதி, சென்னை கோட்டையை நோக்கி மனு கொடுக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அம்சராஜ், வரும் நவம்பர் 24ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில், சாலைப் பணியாளர் சங்கம் கலந்துகொள்வதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தேர்தலுக்கு முன் தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.