ஐயாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்..சீமான்
Apr 24, 2021, 21:16 IST1619279195000
தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச்செயலாளர் மயிலை ப.வேலுமணி தந்தை க.பஞ்சாட்சரம் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்த இரங்கல் குறிப்பில்,
’’தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச்செயலாளர் அன்பு மாமா மயிலை ப.வேலுமணி அவர்களின் தந்தையார் ஐயா க.பஞ்சாட்சரம் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஐயாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்.’’என்று தெரிவித்திருக்கிறார்.