பசும்பொன் மக்கள் கழக நிறுவனர் இசக்கி முத்து காலமானார்
Apr 23, 2021, 15:45 IST1619172903000
பசும்பொன் மக்கள் கழக நிறுவனர் ச.இசக்கி முத்து இன்று காலையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் சார்பில் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் பெரும்பான்மயாக இருக்கும் முக்குலத்தோர் சமுதாயம் மக்கள், ஏழை எளிய பின் தங்கிய்a சமுதாய மக்கள் என்றும், கல்வி-வேலை வாய்ப்பில் இச்சமுதாய மக்களுக்கும் இருபது சதவிகிதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றூ தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தார் இசக்கி முத்து. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து தனது கோரிக்கையினை வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் அவரது மறைவு அச்சமுதாய மக்களை பெருதும் துயரத்திற்கு ஆளாக்கி இருக்கிறது.