ஆதாரத்துடன் பேசவில்லை…ரஜினி கைப்பட எழுதிய கடிதம்

 

ஆதாரத்துடன் பேசவில்லை…ரஜினி கைப்பட எழுதிய கடிதம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.

ஆதாரத்துடன் பேசவில்லை…ரஜினி கைப்பட எழுதிய கடிதம்

தூத்துக்குடி சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால்தான் துப்பாக்கி சூடு நடந்தது என்று ரஜினி கூறியது பெரும் பரபரப்பையும், சர்ச்சையினையும் ஏற்படுத்தியது.

ஆதாரத்துடன் பேசவில்லை…ரஜினி கைப்பட எழுதிய கடிதம்

இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, ரஜினிக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. இரண்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை ரஜினிகாந்த். இதையடுத்து விசாரணை ஆணையத்தின் 15 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்து தனது கைப்பட கடிதம் எழுதிய கடிதத்தினை வழக்கறிஞர் மூலமாக சமர்ப்பித்துள்ளார்.