என்னை ’பைத்தியம்’ என்று நினைத்தார்கள்.. கமல் மூத்த மகள் பரபரப்பு

 

என்னை ’பைத்தியம்’ என்று நினைத்தார்கள்.. கமல் மூத்த மகள் பரபரப்பு

மூன்று மாதங்களுக்கு முன்பே நான் இதை அறிந்துகொண்டேன். அப்போதே நான் சொன்னபோது, என்னை பைத்தியம் என்று மக்கள் நினைத்தார்கள் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன்.

என்னை ’பைத்தியம்’ என்று நினைத்தார்கள்.. கமல் மூத்த மகள் பரபரப்பு

கொரோனா முதல் அலையின் தாக்கம் குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுமே நடிகர், நடிகைகள் பலரும் மாலத்தீவுக்கு சென்று கொண்டாடிய போட்டோக்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. தற்போது இரண்டாம் அலை தீவிரமாக இருக்கும் நிலையிலும் மக்கள் துன்பத்தில் இருக்கும் நிலையிலும் கூட, லாக் டவுன் இல்லாததால் தற்போதும் கோவா, மாலத்தீவு சென்று கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து நடிகை ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘’ மக்கள் துன்பப்பட்டு வரும் நேரத்தில் நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்வதற்கான இது அல்ல என்பதே என் எண்ணம். மக்கள் துன்பத்தில் இருக்கும் நேரத்தில் தன்னிடம் இருக்கும் செல்வத்தை காட்டி அதை செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது பொறுப்பான செயல் அல்ல. மக்களால்தான் நாம் இந்த வசதிக்கு வந்திருக்கிறோம். அதனால் அவர்களும் நம் வசதி நன்றி செலுத்துவதற்கான நேரம் இதுதான்’’என்று உருக்கமாக சொல்லி இருக்கிறார்.

என்னை ’பைத்தியம்’ என்று நினைத்தார்கள்.. கமல் மூத்த மகள் பரபரப்பு

அவர் மேலும், ‘’கொரோனா முதல் அலை ஓய்ந்த பின்னரும் கூட லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதும் கூட, நான் என் பாதுகாப்பினை குறைதுக்கொள்ளவில்லை. கொரோனாவால் அனைவருக்கும் கடுமையான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் கொரோனா முடிந்துவிடவில்லை. விதிமுறைகள் பின்பற்றாவிட்டால், ஒரு நடிகராகவும் ஒரு நபராகவும் எனது பாதுகாப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிக்க எனக்கு உரிமை உண்டு என்று சொல்லி வந்தேன். தொற்றுநோயின் பிடியில் இருந்து நாம் இன்னும் விடுபடவில்லை. அதன் பிடியில்தான் இருக்கிறோம் என்பதை நான் உணர்ந்தேன். மூன்று மாதங்களுக்கு முன்னரே நான் அறிந்துகொண்டேன். இதை வெளியே சொன்னதும் என்னை பைத்தியம் என்று நினைத்தார்கள்’’என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.