போன பணம் போனதுதான்… கமல் விரக்தி

 

போன பணம் போனதுதான்… கமல் விரக்தி

கோவை உக்கடம் பெரியகுளத்தின் கரையில் கட்டப்பட்டிருந்த 12 அடி உயர தடுப்புச்சுவர் நேற்று இரவு பெய்த ஒரு நாள் மழைக்கே இடிந்து விழுந்துள்ளது. இந்த சுவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வெறும் ஆறு மாதங்கள் தான் ஆகின்றன. ஆறே மாதத்தில் அடித்துச் செல்லப்படும் தடுப்பணை, கட்டும் போதே இடிந்துவிழும் மருத்துவமனை, திறப்பு விழாவின் போதே நொறுங்கும் கிளினிக் சுவர் என்று தொடரும் ’டெண்டர் அரசின்’ சாதனை பட்டியலில் கோவை பெரியகுளம் தடுப்புச் சுவரும் இணைந்திருக்கிறது என்கிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.

போன பணம் போனதுதான்… கமல் விரக்தி

அவர் மேலும் தனது அறிக்கையில், ’’ஆயிரம் ரூபாய் எலக்ட்ரிக் ஷேவருக்கு கூட ஒரு வருடம் வாரண்டி இருக்கிறது. கோடிக்கணக்கில் டெண்டர் விட்டு கட்டப்படும் கட்டுமானங்களுக்கு ஏன் கேரண்டியும் இல்லை வாரண்டியும் இல்லை. டெண்டர்கள் கூட சம்பந்திகளுக்கும், மச்சினன்களுக்கும் அளிக்கப்படும் மாயமென்ன? இந்தக் கட்டுமானங்கள் இடிந்து விழுந்த பின்னர் குத்தகைதாரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தண்டிக்கப்பட்ட அதிகாரிகள் எத்தனை பேர்?’’என்று கேள்வி எழுப்பும் அவர்,

’’அடிப்படை வசதிகளே சரியாக இல்லாத நகரத்தில் அழகுபடுத்தும் பணிகள் என்ற பெயரில் நடப்பதெல்லாம் சுரண்டல் தான் என்பதன் சாட்சியாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுக்க கட்டப்பட்ட அனைத்து அரசு கட்டுமானங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். போன பணம் போனதுதான் என்றாலும் குறைந்தபட்சம் உயிரிழப்புகளையாவது தடுப்பதற்கு இந்த முன்னெச்சரிக்கை உதவும்’’என்கிறார் நம்பிக்கையுடன்.