குண்டுகள் மார்பில் பாய்ந்து துடிதுடித்து கர்ப்பிணி மகள் பலி;தந்தை தலைமறைவு

 

குண்டுகள் மார்பில் பாய்ந்து துடிதுடித்து கர்ப்பிணி மகள் பலி;தந்தை தலைமறைவு

திருமணமாகி 4 மாதங்களே ஆன இளம் பெண் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தந்தையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி இருக்கும் சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

குண்டுகள் மார்பில் பாய்ந்து துடிதுடித்து கர்ப்பிணி மகள் பலி;தந்தை தலைமறைவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாதையன்தொட்டியை சேர்ந்த அருணாசலம்- மாதவி தம்பதியின் மகள் வெங்கடலட்சுமி. இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகின்றன. தற்போது இவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இந்நிலையில் தந்தை அருணாசலத்திற்கும் தாய் மாதேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு இடையில் நின்று அவர்களின் தகராறை தடுத்திருக்கிறார் வெங்கடலட்சுமி. தகராறில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அருணாசலம், உரிமம் இல்லாமல் வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட முயன்றிருக்கிறார்.

குண்டுகள் மார்பில் பாய்ந்து துடிதுடித்து கர்ப்பிணி மகள் பலி;தந்தை தலைமறைவு

இதைக்கண்டு அதிர்ந்து போன மகள் வெங்கடலட்சுமி, குறுக்கே பாய்ந்து தந்தை சுடுவதை தடுக்க பார்த்திருக்கிறார். ஆனால் அதற்குள் அருணாசலம் சுட்டு விட்டதால், துப்பாக்கி குண்டுகள் வெங்கடலட்சுமி மார்பில் பாய்ந்து அவர் துடிதுடித்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை எல்லோரும் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் அறிந்ததும் அருணாசலம் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த தளி காவல்துறையினர் அருணாசலத்தை தேடி வருகின்றனர்.

கர்ப்பிணி பெண் தன் தந்தையினாலேயே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.