வீரபாண்டி தொகுதி சுயேட்சை வேட்பாளர் மோகன் மரணம்

 

வீரபாண்டி தொகுதி சுயேட்சை வேட்பாளர் மோகன் மரணம்

வீரபாண்டி தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் மோகன் திடீர் மரணம் அடைந்தார்.

சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டி சின்னையாபுரத்தைச் சேர்ந்தவர் மோகன். 61 வயதான சமூக ஆர்வலரான மோகன் திருமணமாகாதவர். இவர் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். சமூக ஆர்வலரான மோகன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்டார்.

வீரபாண்டி தொகுதி சுயேட்சை வேட்பாளர் மோகன் மரணம்

கடந்த 6ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் தாசநாயக்கன்பட்டி பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார். அதன் பின்னர் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி அன்று இரவு மோகன் வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மோகன் நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தேர்தல் முடிவை அறியாமலேயே மோகன் மரணம் அடைந்தது அவரது உறவினர்களையும் ஆதரவாளர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.