அன்புமணிக்கு பதிலடி; திருமாவளவனுக்கு காங்., திமுக எம்.பிக்கள் ஆதரவு

 

அன்புமணிக்கு பதிலடி; திருமாவளவனுக்கு காங்., திமுக எம்.பிக்கள் ஆதரவு

அரக்கோணம் இரட்டை படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் அரக்கோணம் படுகொலையை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அரக்கோணம் படுகொலையை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அன்புமணிக்கு பதிலடி; திருமாவளவனுக்கு காங்., திமுக எம்.பிக்கள் ஆதரவு

இந்த அரக்கோணம் இரட்டை படுகொலைக்கு காரணம் பாமக தான் என்று திருமாவளவன் தொடர்ந்து அக்கட்சி மீது குற்றம் சுமத்தி வருகிறார். அதனால் பாமகவை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் அரக்கோணம் சம்பவம் குறித்து பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், அரக்கோணம் கொலை சம்பவம் குடிபோதையில் நடந்தது. அந்த படுகொலைக்கு சாதிய மோதல் காரணமில்லை . திருமாவளவன் போன்றவர்கள் இந்த விஷயத்தில் புதிதாக ஒரு தகவலைப் பரப்புகிறார்கள் படித்தவர்கள் யாரும் திருமாவளவனை நம்பமாட்டார்கள். படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்று கூறியிருந்தார்.

அன்புமணிக்கு பதிலடி; திருமாவளவனுக்கு காங்., திமுக எம்.பிக்கள் ஆதரவு

இந்த வீடியோவை அடுத்து, ’’நாங்கள் படித்தவர்கள் திருமாவளவனை நம்புகிறோம்’’ என்று பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி திருமாவளவனுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

’’அரசியலில் பங்கேற்கவோ, ஆதரிக்கவோ கல்வி ஒரு தகுதி அல்ல. கொள்கையும், கொள்கைக்காக நிற்கும் நெஞ்சுறுதியும்,நேர்மையுமே முக்கியம். அப்படிப்பட்ட கொள்கையாளர் சகோதரர் திருமாவளவன், தலித்துகளுக்காக மட்டுமல்ல அனைவரின் கல்வி, இடஒதுக்கீட்டிற்காக நிற்பவர். அவரை ஆதரிப்பதில் பெருமைகொள்கிறேன்.’’என்கிறார் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி.

’’டாக்டர் திருமாவளவன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது’’என்று தெரிவி்த்திருக்கிறார் தர்மபுரி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார்.