கண் விழித்த சென்னை மக்களுக்கு காத்திருந்த மகிழ்ச்சி

 

கண் விழித்த சென்னை மக்களுக்கு காத்திருந்த மகிழ்ச்சி

இன்று காலை கண் விழித்ததுமே திடீர் மகிழ்ச்சியில் சென்னை மக்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் பல பகுதி மக்களும் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள்.

கண் விழித்த சென்னை மக்களுக்கு காத்திருந்த மகிழ்ச்சி

சென்னையில் விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையில் மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக வெயில் உச்சத்தில் சுட்டெரித்து வரும் நிலையில் மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்திலும், கீரமங்கலம், சேந்தமங்கலம், நகரம், சேந்தங்குடி ஆகிய பகுதிகளில் 40 நிமிடங்களுக்கு மேலாக இன்று காலையில் மழை பெய்து வருகிறது. விராலி மலையிலும் காலையில் நல்ல மழைபெய்து வருகிறது.

கண் விழித்த சென்னை மக்களுக்கு காத்திருந்த மகிழ்ச்சி

அரையப்பட்டி, தினையாகுடி பகுதிகளிலும் இன்று காலையில் 10 நிமிடங்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது.

சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே கடந்த சில நாட்களாக அதிக உஷ்ணத்தால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் திடீரென்று பெய்யும் மழையால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.