படுக்கையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சினேகா
புன்னகை அரசி சினேகாவுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த நட்சத்திர தம்பதிக்கு நான்கு வயதில் விஹான் என்கிற மகன் இருக்கிறான். கடந்த ஜனவரியில் ஆத்யந்தா என்ற மகளை பெற்றெடுத்தார் சினேகா.
மகன் பிறந்த பின்னரும் கூட சினிமாக்களில் நடித்து வந்த சினேகா, மகள் பிறந்த பின்னர் சினிமாக்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதனால்தானோ என்னவோ தெரியவில்லை. தனது குடும்ப போட்டோக்களை அடிக்கடி சமூக வலைப்பக்கங்களில் வெளி்யிட்டு சந்தோசப்பட்டு வருகிறார் சினேகா.
அண்மையில் தனது மகள் பிறந்தநாள் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளி்யிட்டிருந்தார் சினேகா.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தூக்க கலக்கத்தில் படுக்கையில் மகன் மற்றும் மகளுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சினேகா. ரசிகர்களின் ஏகோபித்த வாழ்த்துக்களுடன் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.