மன்னர் சரபோஜியின் 243 வது பிறந்த நாள் விழா; 16 நூல்களை வெளியிட்ட அமைச்சர் துரைக்கண்ணு

 

மன்னர் சரபோஜியின் 243 வது பிறந்த நாள் விழா; 16 நூல்களை வெளியிட்ட அமைச்சர் துரைக்கண்ணு

தஞ்சை மன்னர் சரபோஜியின் 243 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு சரஸ்வதி மகால் நூலகம் சார்பாக தமிழ் என்னும் எழுத்து, சுவடிகளின் வரலாறு மற்றும் பல வரலாற்று ஆய்வு கட்டுரைகள், நிலத்தடி நீர் காணுதல், சித்தமருத்துவர் லட்சணங்களும் வைத்தியமும் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு மராட்டிய மொழிகளில் பதினாறு நூல்களை வெளியிட்டார்.

மன்னர் சரபோஜியின் 243 வது பிறந்த நாள் விழா; 16 நூல்களை வெளியிட்ட அமைச்சர் துரைக்கண்ணு

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘’ மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாய மசோதாக்களால் எந்த பாதிப்பும் விவசாயிகளுக்கு ஏற்படாது. வேளாண் சட்டத்தால் பாதிப்பில்லை’’ என்று கூறினார்.

மன்னர் சரபோஜியின் 243 வது பிறந்த நாள் விழா; 16 நூல்களை வெளியிட்ட அமைச்சர் துரைக்கண்ணு

மேலும், ‘’பிரதம மந்திரி கிசான் நிதி உதவி திட்டத்தின் முறைகேட்டில் இதுவரை 72 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . அதிகாரிகள் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.