2வது அலையின் மின்னல் வேகம்: சென்னையில் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க திட்டம்

 

2வது அலையின் மின்னல் வேகம்: சென்னையில்  பரிசோதனை முகாம்களை அதிகரிக்க திட்டம்

சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அதை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையினை எடுக்க இருக்கிறது.

2வது அலையின் மின்னல் வேகம்: சென்னையில்  பரிசோதனை முகாம்களை அதிகரிக்க திட்டம்

கொரோனா வைரைஸின் 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. முதல் அலையின் தாக்கத்தை விடவும் 2வது அலையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. தமிழகத்தில் ஒரேநாளில் 3986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

2வது அலையின் மின்னல் வேகம்: சென்னையில்  பரிசோதனை முகாம்களை அதிகரிக்க திட்டம்

சென்னை மாநகராட்சியில் நேற்று ஒருநாளில் மட்டும் 1459 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் நோய் தொற்றினை கட்டுப்படுத்த மீண்டும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி. அதன்படி, சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.